சனாதன ஒழிப்பு மாநாடு பின்னணி; சி.பி.ஐ விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் மனு!

Spread the love

சென்னையில் நடந்த சனாதன மாநாட்டின் பின்னணி குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் சென்னையை சேர்ந்தவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னையில் கடந்த 2ம் தேதி தமுஎகச சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு உள்ளிடோர் பங்கேற்றனர். இதில் சனாதனம் குறித்து உதயநிதி பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது பல்வேறு காவல் நிலையங்கள் மற்றும் நீதிமன்றங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் அரசியலமைப்பு விதிகளுக்கு எதிராக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு ஆகியோர் பங்கேற்றுள்ளனர். எனவே சனாதன ஒழிப்பு மாநாட்டின் பின்புலம் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி சென்னையை சேர்ந்த ஜெகநாத் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு அவசர வழக்காக விசாரிக்கப்படுமா அல்லது முறைப்படி பட்டியலிட்டு விசாரிக்கப்படுமா என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours