தமிழ் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு காலமானார்!

Spread the love

கடந்த 1 ஆண்டுகளாக புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்ட வந்த நிலையில் கடல் சார்ந்த தொல்லியல் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வந்த ஒரிசா பாலு காலமானார்.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் வாய் பகுதியில் ஏற்பட்ட புற்று நோய் காரணமாக ஒரிசா பாலு சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.

இவரது இயற்பெயர் சிவஞானம் பாலசுப்பிரமணி.குமரி கண்டம், லெமூரிய கண்டம், கடல் கொண்ட தென்னாடு, தென் புலத்தார் தொடர்பான ஆய்வுகளில் ஒரிசா பாலு ஈடுபட்டு வந்தார்.

ஆமைகள் மூலமாக நீரோட்டத்தை அறிந்து பழங்கால தமிழ் மக்கள் கடல் பயணம் மேற்கொண்டதை அறிந்தவர் ஆவார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours