முதலமைச்சருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு..!

Spread the love

மிக்ஜாம் புயல் – மழைவெள்ள பாதிப்புகளை சரி செய்ய நிவாரண உதவிகளை மேற்கொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதினார் . அதில் 5060 கோடி ரூபாய் நிவாரண உதவி தொகையாக வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட வருவார் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்,ஹெலிகாப்டர் மூலம் சென்னை , செயல்பட்டு, காஞ்சிபுரம் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார்.

மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமை செயலர் சிவதாஸ் மீனா ஆகியோர் உடன் இருந்தனர். இந்த ஆய்விற்கு பின், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், வெள்ளப்பாதிப்பு மற்றும் மீட்புப்பணிகள் குறித்து எடுத்துரைத்தார். அப்போது, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர்.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உடன் இருந்தனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours