இந்திய பங்குச்சந்தைகளுக்கு தொடர்ந்து 3 நாட்களுக்கு விடுமுறை ஆகும். அதாவது சனி, ஞாயிறு எப்போது பங்குச்சந்தைகள் இயங்காது. இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான திங்கள் அன்று சந்தைகள் விடுமுறையாகும்.
பிஎஸ்இயின் இணையதளத்தில் தெரிவிக்கபப்ட்டுள்ள தகவலின்படி, ஈக்விட்டி பிரிவு, ஈக்விட்டி டெரிவேட்டிவ் பிரிவு மற்றும் எஸ்எல்பி பிரிவு ஆகியவை ஜூன் 17ம் தேதி இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 17ம் தேதியான திங்கள் கிழமை அன்று இந்திய பங்குச்சந்தைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திங்கள் கிழமை அன்று தேசிய பங்குச்சந்தை, மும்பை பங்குச்சந்தை என இரண்டு சந்தைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
என் எஸ் இ, பி எஸ் இ போலவே மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா சந்தையும் காலை அமர்வு இயங்காது. ஆனால் அதே நேரத்தில் மாலையில் வர்த்தகம் மீண்டும் தொடங்கும். அதாவது மாலை 5 மணி முதல் இரவு 11:30/11:55 மணி வரை வர்த்தகம் நடைபெறும்.
+ There are no comments
Add yours