பங்குச் சந்தை: ஒரே நாளில் ரூ.1.8 லட்சம் கோடி லாபம்

Spread the love

இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்றத்துடன் வர்த்தகத்தை முடிவு செய்துள்ளது. மேலும் ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ள தேர்தலுக்குப் பிறகு மாலையில் வெளியாகும் கருத்துக் கணிப்புகள் மீதுதான் இப்போது அனைவரின் பார்வையும் உள்ளது.

அதனைத்தொடந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும்.

தேர்தல் முடிவுகள் குறித்து, முக்கிய வல்லுனர்கள் மற்றும் சந்தை ஆய்வாளர்கள், தேர்தல் முடிவுகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக இருக்கும் என்றும், மீண்டும் பாஜக ஆட்சி அமையும் என்றும் நம்புகின்றனர். இருப்பினும், முழுமையாக ஜெயிக்குமா என்றால் முழுமையான பதில் இல்லை.

நாளின் முடிவில் சென்செக்ஸ் 76 புள்ளிகள் (0.10 சதவீதம்) உயர்ந்து 73,961.31 ஆகவும் உள்ளது. இன்று சென்செக்ஸில் 15 பங்குகள் உயர்ந்துள்ளன. நிஃப்டி 50 42 புள்ளிகள் (0.19 சதவீதம் உயர்ந்து 22,530.70 இல் நிறைவடைந்தது, 26 பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை முடிவு செய்துள்ளன.

பிஎஸ்இயில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மூலதனம் முந்தைய அமர்வில் கிட்டத்தட்ட ரூ. 410.4 லட்சம் கோடியிலிருந்து ரூ.412.2 லட்சம் கோடியாக உயர்ந்தது, முதலீட்டாளர்களை ஒரே அமர்வில் சுமார் ரூ.1.8 லட்சம் கோடி லாபத்தை ஈட்டியுள்ளன.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours