தங்கத்தின் விலை மீண்டும் உயர துவங்கியது

Spread the love

சென்னை: சென்னையில் இன்று (ஆக.17) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு பவுன் ரூ.53,360-க்கு விற்பனையாகிறது.

மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரியை நிர்மலா சீதாராமன் குறைத்ததில் இருந்தே தங்கத்தின் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த வாரம் ஏற்ற இறக்கங்களை சந்தித்த தங்கத்தின் விலை இந்த வாரம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. அந்தவகையில் இன்று (ஆக.17) தங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,670-க்கும், பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு பவுன் ரூ.53,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours