வடகிழக்கு பருவமழை தொடர்ந்து தீவிரமாகி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர்பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாலச்சந்திரன் கூறியதாவது :
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழைபெய்துள்ளது.
5 இடங்களில் அதிகனமழையும்,17 இடங்களில் மிக கனமழையும்,55 இடங்களில் கன மழை பதிவாகியுள்ளது. சீர்காழியில் அதிக பட்சமாக 24 சென்டிமீட்டர் அதிக அளவு மழை பதிவாகியுள்ளது.
கனமழை எச்சரிக்கை பொருத்தவரையில் திருவாரூர் ,மயிலாடுதுறை நாகப்பட்டினம், கடலூர் விழுப்புரம், திருவண்ணாமலை செங்கல்பட்டு புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும்.
தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை, தஞ்சை, கள்ளக்குறிச்சி சேலம் வேலூர் ராணிப்பேட்டை காஞ்சிபுரம்திருவள்ளூர் சென்னை ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் (Scaring Rain) கனமழை பெய்யும்.
அடுத்த மூன்று தினங்களுக்கு தமிழக கடற்கரை பகுதிகள் மன்னார் வளைகுடா குமரி கடல் பகுதியில் பலத்த காற்றுமணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும் எனபதால் மீனவர்கள் இந்த பகுதிகளில் மீன் பிடிக்கச்செல்ல வேண்டாம்
தென்மாவட்டங்களில் குறிப்பாக குமரி கடல் பகுதியில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. குறிப்பாக 11 12 தேதிகளில் அந்த பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு உள்ளது.
இன்றைய தினத்தை பொருத்தவரையில் சென்னை மற்றும் வட மாவட்டங்களில் மழை பெய்யும் . வட உள்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
ஜனவரி மாதம் மழை அளவீடுகளாக தெரிவிக்க வேண்டும் என்றால் நாகப்பட்டினத்தில் 205 மில்லி மீட்டர் மழைபதிவாகியுள்ளது. ஏற்கனவே 245 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பெய்துள்ளது.
கடலூரைப் பொருத்தவரையில் ஏற்கனவே 197 மில்லி மீட்டர் 153 மில்லி மீட்டர் மழை என்பது அதிகபட்சமாகபதிவாகி இருக்கும் நிலையில் தற்போது 106 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.
வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரையில் கடந்த மூன்று மாதத்தில், இந்த ஆண்டு 455 மில்லி மீட்டர்பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு 445 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.
இந்த ஆண்டு நான்கு சதவீதம் அதிகமாகவும் கடந்த ஆண்டு ஒரு சதவீதம் அதிகமாகவும் மழை பெய்துள்ளது. குளிர்காலத்தை பொறுத்தவரையில் இந்த எட்டு தினங்களில் 28.7 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது எனபாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours