நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்

Spread the love

ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு.

ஆடி அமாவாசை முன்னிட்டு இன்று ராமேஸ்வரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்ததுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் ஆனது தீர்த்தம், மூர்த்தி, ஸ்தலம் என முப்பெருமைகளையும் கொண்டு காசிக்கு நிகரான புண்ணிய ஸ்தலமாகும்.

இந்த புண்ணிய ஸ்தலத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அத்துடன் திருவிழா மற்றும் அமாவாசை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து செல்வது வழக்கமான ஒன்றாகும்.

இந்த நிலையில் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து ஆயிரக்கணக்கானோர் வழிபாடு செய்தனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours