இன்று தொடங்கியுள்ள ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடி அமர்ந்துள்ள இருக்கைக்கு முன்பு இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என குறிப்பிடப்பட்டுள்ள பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகவும் சக்திவாய்ந்த அமைப்புகளில் ஒன்றான ஜி 20 அமைப்பின் தலைமை பதவியை இந்த முறை இந்தியா வகித்து வருகிறது. இதனிடையே, ஜி 20 உச்சி மாநாடு இன்று மற்றும் நாளை டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியா வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை ஜி 20 மாநாட்டில் பங்கேற்க உலக தலைவர்கள் பாரத் மண்டபம் வந்தனர். அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார். அதன் பின்னர் அனைவரும் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர், தற்போது மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.
+ There are no comments
Add yours