சந்திரபாபு நாயுடுவை கைது செய்தது எனக்கு பிடிக்கவில்லை..! மேற்கு வங்க முதல்வர்

Spread the love

ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான என் சந்திரபாபு நாயுடு, அவரது ஆட்சி காலத்தில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்த விவகாரத்தில் பல கோடி ரூபாய் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.

முன்னாள் முதல்வரும் தற்போது எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கும் சந்திரபாபு நாயுடு கைது ஆந்திர மாநிலத்தையே அதிர வைத்தது. இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹைதராபாத், விசாகப்பட்டினம் மற்றும் திருப்பதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனால், அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்காக போலீசார் ஆங்காங்கே நிறுத்தி வைத்தும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்தும் வருகின்றனர். இதற்கிடையில், கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடுவிடம், விஜயவாடா மங்களகிரியில் உள்ள சிஐடி அலுவலகத்தில் நேற்று அதிகாலை 3 மணி வரை விசாரணை நடத்தப்பட்டது.

அதன் பிறகு நேற்று இரவு அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவர் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி, சந்திரபாபு நாயுடுவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி வருகிற 23ம் தேதி வரை முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நீதிமன்ற காவலில் விசாரணை காவலில் இருக்க உள்ளார்.

இந்நிலையில் ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருப்பது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், “சந்திரபாபு நாயுடுவை கைது செய்தது எனக்கு பிடிக்கவில்லை, தவறு இருந்தால் நீங்கள் பேசி விசாரணை நடத்துங்கள். யாரையும் பழிவாங்கும் நோக்கில் எதுவும் செய்யக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours