எனது குற்றப் பின்னணியை நிரூபித்தால் பாஜகவை விட்டு விலக தயார்.. தமிழிசைக்கு திருச்சி சூர்யா பதிலடி !

Spread the love

“பாஜகவில் தற்போது இருப்பவர்கள் குற்றப் பின்னணியில் இருப்பவர்கள் என்று தமிழிசை நிரூபித்தால் நான் பாஜகவில் இருந்து விலகிக் கொள்கிறேன்” என்று பாஜக ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவா பகீரங்கமாக அறிவித்துள்ளார்.

குற்றப்பின்னணியில் உள்ளவர்கள் அதிகபேர் பாஜகவில் இணைந்துள்ளதாக சமீபத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு கட்சிக்குள் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அவரை கண்டித்து சமூகவலைதளங்களில் பாஜக நிர்வாகிகள் பதிவிட்டு வருகின்றனர். தமிழிசையின் பேச்சை கடுமையாக கண்டித்து சூர்யா சிவா, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். தேசியத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற பாடம் எடுக்கக்கூடிய தாங்கள் ஒரு முன்னாள் மாநிலத் தலைவர் பொது ஊடகங்களில் இப்படி கருத்து பதிவிடுவது சரியா? என்று கேள்வியும் கேட்டு இருந்தார்.

இந்நிலையில், விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிக வாக்குகள் பெற்ற மண்டல தலைவர் கருப்பையாவை, மதுரை வில்லாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் திருச்சி சூர்யா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் தமிழிசையின் பேச்சு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் திமுகவில் இருந்த போது எனது மகன் பிறந்த நாளுக்கு தமிழிசை அக்கா வந்துள்ளார். தனிப்பட்ட முறையில் என் மீது பாசமானவர். ஆனால் கட்சி ரீதியாக பார்த்தால் அவர் தலைவராக இருக்கும்போது நான் பாஜகவிற்கு வரவில்லை. அவரைப் பரட்டை என்று கூறிய போது அவருக்கு கோபம் வந்தது. ஆனால் அண்ணாமலையின் புகைப்படத்தை ஒட்டி அதை திமுகவினர் திட்டியதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.

பாஜகவில் தற்போது இருப்பவர்கள் குற்றப் பின்னணியில் இருப்பவர்கள் என்று தமிழிசை நிரூபித்தால் நான் பாஜகவில் இருந்து விலகுகிறேன். தற்போது கட்சியில் இருப்பவர்கள் மீது எந்தவித குற்றப் பின்னணியும் இல்லை. அப்படி இருந்தாலும் அது முன்னாள் இருந்த தலைவர்களால் தான் இருக்கும். ஆனால் சம்பந்தமில்லாமல் எங்கள் தலைவரை குற்றம் சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது” என்று அவர் கூறினார்


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours