திருநெல்வேலி மாவட்டத்தில் கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை வட்டம். கரைச்சுத்துப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ், ராகுல்கண்ணன், மற்றும் முகேஷ் ஆகிய மூன்று பள்ளி மாணவர்களும் கடற்கரைக்கு குளிக்கச் சென்ற போது எதிர்பாராதவிதமாக கடல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை வட்டம். கரைச்சுத்துப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ், (வயது 14), ராகுல்கண்ணன், (வயது 14) மற்றும் முகேஷ், (வயது 13) ஆகிய மூன்று பள்ளி மாணவர்களும் கடற்கரைக்கு குளிக்கச் சென்ற போது எதிர்பாராதவிதமாக கடல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன் எனவும் உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் , தெரிவித்துக்கொள்வதோடு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் எனவும் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
+ There are no comments
Add yours