நிலாவில் விக்ரம் லேண்டரிலிருந்து தரையிறங்கியுள்ள பிரக்யான் ரோவர் தனது இலக்கில் 100 வது மீட்டரை கடந்து தொடர்ந்து பயணிப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திரயான்-3 விண்கல திட்டம் மூலம் இந்தியா நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்து வருகிறது. கடந்த 23-ந்தேதி விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது. அதில் இருந்து பிரக்யான் ரோவர் சுமார் ஆறு மணி நேரம் கழித்து நிலவில் கால் பதித்தது.
கால் பதித்ததில் இருந்து பிரக்யான் ரோவர் தனது இலக்குகளை ஒவ்வொன்றாக அடைந்து வருகிறது. நிலவில் ஆக்சிஜன் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ள பிரக்யான், தொடர்ந்து பணிகளை மேற்கொள்ளும் போது மூன்று மீட்டர் தொலைவில் ஒரு பள்ளத்தை பார்த்தது.பார்த்தவுடன் சுதாரித்துக் கொண்டு மாற்று பாதையில் செல்லும் திறன் இருந்ததால், அதன் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது
தரையிறங்கிய ஒரு வாரத்தில் 100 மீட்டரை கடந்து சாதனைப் படைத்துள்ளது ரோவர். மீதமுள்ள தூரத்தை இன்னும் ஒரு வாரத்தில் ரோவர் கடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours