வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது படிப்படியாக மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, மேற்கு வங்கம், ஜார்கண்ட், பீகார், உத்தரப் பிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் விதர்பா உள்ளிட்ட மத்தியப் பிரதேசத்தின் பல பகுதிகளில் இன்று முதல் ஆகஸ்ட் 21 வரை மழை பெய்யும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய கூடும்.
+ There are no comments
Add yours